இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், மற்றும் நடனம், நாடகம், சங்கீதம் போன்ற தமிழ்க் கலைகளிலே ஈடுபாட்டையும், எமது தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

மாணவர்களது மொழி, கலை, கலாசாரம் மீதான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களது தமிழ் மொழி அறிவு மீதான தரத்தை உயர்த்துவதற்காகவும் கல்வி நிலையத்தால் ஆண்டு தோறும் தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஆண்டுப் பரீட்சை, மற்றும் கலை விழா, வாணி விழா போன்ற கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தப்படுகின்றன.