நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் பயின்ற
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களில் செல்வன். கவின் கார்த்திக் ரிச்சார்ட்ஸ் மாநிலத்தின் முதல் நிலையில் வந்து பெருமை சேர்த்துள்ளார்.

செல்வி. தீபிகா பாஸ்கரதேவன் மாநில அளவில் நான்காவது நிலையிலும்,
செல்வி. ரெய்னா நெட்டி பாஸ்கரன்
ஐந்தாவது நிலையிலும் தகமை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

ஒன்பது மாணவர்கள் அதி திறமைச் சித்தி (Band 6) மற்றும் இரண்டு மாணவர்கள் திறமைச் சித்தி (Band 5) நிலையில் தமது பெறுபேற்றினை ஈட்டியிருக்கிறார்கள்.

இவர்கள் சிறுவயது முதல் மாணவர்களாக நமது கல்வி நிலையத்தில் கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கது

மாணவர்களுக்கு அவர்களின் ஆசியர்கள், வழிகாட்டும் முன்னாள் மாணவர்கள், அதிபர், தலைவர், HSC இணைப்பாளர், கல்விப் பொறுப்பாளர், சக நிர்வாகக் குழு அங்கத்தினர் போன்றோர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவர்களுக்குக் கற்பித்தல் வழிகாட்டலைத் தொடர்ந்து செய்திருந்தார்கள். மாணவர்களது கடின உழைப்பையும் தனியே குறிப்பிட வேண்டும்.

அவர்களுக்கான வழிகாட்டல் பட்டறைகளில் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், ஆய்வுக்கான வழி முறைகளையும் வழங்கிய அறிஞர் பெருமக்களையும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.

தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள், ஆர்வத்தோடு கற்ற மாணவர்கள், வழிகாட்டும் முன்னாள் மாணவர் குழு, பெற்றோர் சமூகம் உள்ளிட்ட எல்லோருக்கும் நிறைவான வாழ்த்துகள்.

தமிழ்க் கல்வி நிலையம்
ஹோம்புஷ்